Wednesday, November 9, 2011

மறைத்துக் கொண்டு வாழ்கிறேன்.


மறப்பதற்கும் நினைத்ததில்லை 
மறைத்துக் கொண்டு வாழ்கிறேன்.  
மனம் கொண்டது மாளிகையில்லை - என்  
மனம் கொன்றாலும் மன்மதன் - நீ 

அழிவதற்கு எண்ணி 
ஆரம்பிக்கா ஈழப்போராயினும் 
அறுதியில் கிடைத்தது 
அழிவுதானே! அது போல 
அதிசையக் காதல் என்று, 
அன்பனே உன்னை 
அழிக்க மனம் வரல்லை - ஆதலால் 
ஆக்கிவிட்டேன் முதற்புள்ளியை முற்றுப்புள்ளியாய்.... 

நினைவுகளைத்தேடி 
என்னால் தனிமையில் 
தொலைய முடியவில்லை 
என் குழந்தையையும், 
கணவனையும் விட்டு - இதற்காகவே 
முதற்புள்ளியை ஆக்கிவிட்டேன் காதலில் 
முற்றுப்புள்ளியாக்கியாக.....

No comments:

Post a Comment