மறப்பதற்கும் நினைத்ததில்லை
மறைத்துக் கொண்டு வாழ்கிறேன்.
மனம் கொண்டது மாளிகையில்லை - என்
மனம் கொன்றாலும் மன்மதன் - நீ
அழிவதற்கு எண்ணி
ஆரம்பிக்கா ஈழப்போராயினும்
அறுதியில் கிடைத்தது
அழிவுதானே! அது போல
அதிசையக் காதல் என்று,
அன்பனே உன்னை
அழிக்க மனம் வரல்லை - ஆதலால்
ஆக்கிவிட்டேன் முதற்புள்ளியை முற்றுப்புள்ளியாய்....
நினைவுகளைத்தேடி
என்னால் தனிமையில்
தொலைய முடியவில்லை
என் குழந்தையையும்,
கணவனையும் விட்டு - இதற்காகவே
முதற்புள்ளியை ஆக்கிவிட்டேன் கா தலில்
முற்றுப்புள்ளியாக்கியாக.....
No comments:
Post a Comment