Wednesday, July 25, 2012

அழுதிடும் கடைசி மடல் ..



நாட்குறிப்பு இதழ்களில் - மண
நாட்குறித்து பாராது - நம் 
காதலுக்கு மரண நாள்குறித்து 
காதலை காலாவதியாக்கிவிட்டாள்  !
காதலி தீர்ப்பெழுதிய வழக்கில் - என் 
காதலே தூக்கிலிடப்பட்டது .. 

இறுதியாய் ஓர் மடல் என்று 
இருபெத்துமூன்று பக்க ஒப்பாரி..  

தீர்பெழுதப்பட்ட ராகுகாலம் 
விக்ருதி வருடம் வைகாசி மாதம் 
இருபதுக்கப்புறம் இரண்டாம் நாள் 
நள்ளிரவுக்கு நாலுநிமிடம் முன்..

ஆங்கிலத்தில் தயவுகூர்ந்து ஆரம்பித்து 
ஆத்திரம் குறையென வேண்டிநிற்க
வேண்டிநின்ற வசனங்கள் 
வீரியமாய் தொடர
முப்பது வரிகளில்
முதற்பக்கம் காலி..

ஆங்கிலம் என்றாலே ஒவ்வாமை எனக்கு 
"நான் உனை இழக்க " எனும் வாசகம் 
ஆங்கிலத்தில் அதற்கு 

நினைவு குறித்து எழுதிய 
நாட்குறிப்பெல்லாம் 
என்னிடம் கொடுத்தது தவறென்றாய் 
எண்ணம் குறித்துவைத்த நாளெல்லாம் 
என்னிடம் உள்ளதை என்ன சொல்வாய் 

என்னை வசை கூறி வரைந்த பக்கங்கள்
என்னை வந்து சேர்ந்தது துகள்களாக 
ஒட்டினாலும் படிக்க முடியா - நம் 
ஒட்டுடைந்த உறவுக்கு அடையாளமாய் 

"நம் காதலை எரித்தவுடனே - என்  
நாட்குறிப்பையும் எரித்திருப்பேன் - உன் 
கையெழுத்து இல்லை என்றால் " என்றாய் 

மரண தண்டனை தீர்ப்பெழுதும் பேனாவும் 
மரண தண்டனையும் அனுபவிப்பதுபோல் - என்
காதலுக்கு மரணதண்டனை விதித்து - நீ 
கால ஏடு பதிவதற்கும் மரண தண்டனை கொடுத்துவிட்டாய்..

உண்ணவும் மறப்பேன் 
உறங்கவும் மறப்பேன் 
உயிரே உன்னை 
எங்கனம் மறப்பேன் ?

இத்தனையும் தெரிந்தும் 
எத்தனை முறை கேட்டாய்
என்னிடம் மறக்க 
உந்தன் நினைவுகளை 

நீ
எந்த மொழியில் மன்னிப்பு கேட்டாலும் 
எத்தனை முறை மன்னிப்புக்கேட்டலும் 
உன்னை மறப்பதற்கு ஒரு வழி சொன்னால் 
உன்னை மன்னிப்பது பெரிதன்றெனக்கு..

உற்றார்  கேட்டதற்கும், உறவினர் கேட்டதற்கும்
எனக்கு தொழில் இல்லை என்பதினால்  
உனக்கு பதிலில்லை என்றாயே 
ஊர் ஊராய் உன்னோடு நான் வந்த போதெல்லாம் 
உற்றாரும், உறவினரும் உனையேதும் கேட்கல்லையா?

சுயமரணம் சாத்தியம் என்றால் 
சுகமென்றாய் எனை மறப்பதிலும்.

பல்லாயிரம் கண்நீர்த்துளியும் 
பல்லாயிரம் மன்னிப்பும் 
பல்லாயிரம் விவரங்களும் கொண்ட 
காதல் விவாகரத்து பத்திரம்.. 
எனை வந்தடைந்த - உன்
கண்ணீர் நிறைந்த 
அழுதிடும் கடைசி மடலாய். 

Wednesday, November 9, 2011

மறைத்துக் கொண்டு வாழ்கிறேன்.


மறப்பதற்கும் நினைத்ததில்லை 
மறைத்துக் கொண்டு வாழ்கிறேன்.  
மனம் கொண்டது மாளிகையில்லை - என்  
மனம் கொன்றாலும் மன்மதன் - நீ 

அழிவதற்கு எண்ணி 
ஆரம்பிக்கா ஈழப்போராயினும் 
அறுதியில் கிடைத்தது 
அழிவுதானே! அது போல 
அதிசையக் காதல் என்று, 
அன்பனே உன்னை 
அழிக்க மனம் வரல்லை - ஆதலால் 
ஆக்கிவிட்டேன் முதற்புள்ளியை முற்றுப்புள்ளியாய்.... 

நினைவுகளைத்தேடி 
என்னால் தனிமையில் 
தொலைய முடியவில்லை 
என் குழந்தையையும், 
கணவனையும் விட்டு - இதற்காகவே 
முதற்புள்ளியை ஆக்கிவிட்டேன் காதலில் 
முற்றுப்புள்ளியாக்கியாக.....

Sunday, June 26, 2011

எதற்காக இனி பிரார்த்தனைகள்


பிடிவாத  சகியே!

பேசுவதற்கு மொழியில்லா 
காணும் போதெல்லம் 
மௌனித்து ரசித்தேன்..
பேச வேண்டியதை 
கவிதை வடித்தேன்..  
கவி வடித்த 
காகிதம் எல்லாம்
மிதந்தன அந்தரத்தில்- உன் 
பெயரெழுதப்பட்ட ஆனந்தத்தில் ....

இன்று  
உனக்கு கடிதம் எழுத துவங்கையிலே 
காகிதம் எல்லாம் மிதந்தன  
நான் வடித்த கண்ணீரில் 

உன்னை தவிர வேறு உலகம் இல்லை - எனக்கு  
உன்னை தவிர வேறு கிரகமில்லை -  எனக்கு 
உன் மௌன மொழியை படித்து, படித்து 
நான் இப்போதெல்லம் சைகையிலே பேசுகிறேன் 
ஐம்புலனில் இரண்டை தொலைத்தவனாக... 

அதலால்தான் நான் 
கடிதம் எழுதுகிறேன் .. 

அர்த்தமில்லா வாழ்க்கையில் 
அர்த்தமுள்ளது காதல் மட்டும்தான்
காதலுக்கு மொழி முக்கியமில்லை 
காதர்களுக்கு மொழி முக்கையமே..
புரிந்து கொள்வதற்கு அல்ல 
புரியாமையால்  கொல்லாமல் இருப்பதற்கு..

நீ கடல் சேரா நதி என்றால், 
நான் கரை தாண்டாக் கடல். 
என்னால் முடியாது கரைதாண்ட 
என் கரை தாண்டல்,
பல உயிர் தீண்டும்.


நீ 
வழித்துணையா? இல்லை 
வாழ்க்கைத்துணையா? இல்லை
இப்போது போல் எப்போதும் 
விழித்துணையா என நான் அறியேன்.. 


உலகமெல்லம் ஓடுகிறேன் 
உனக்குள் இருக்கும் என்னை 
உணர்த்த.... 
உணர்ந்த நீயும் மௌனம் கொண்டு
என்னைக் கொன்று அதனை ஒழிக்க..

ஆயிரம் அர்த்தங்கள், உன் மௌனத்தில் 
ஆயிரம் அர்த்தத்தில் எதனை எடுப்பேன் உந்தன் மௌனத்தில்....

உன் காதல் மொழி மௌனமாகுகையில்... 
மௌனம் பேசும் வரை காத்திருக்கிறேன்... 

ஆணாக நான் இருந்தும் , 
ஆளாகி நீ இருந்தும் , 
நானாக காதல் சொன்னால் , 
அது அனாகரீகம்......

வாடுகின்ற ஒற்றை ரோஜாவோ, 
உலருகிற இதழ் ஓர முத்தமோ இப்போதைக்கு எனக்கு வேண்டாம்..
" உன்னைக் காதலிக்கிறேன்" என்று ஒரு வார்த்தை சொல்... 
அது போதும் எனக்கு...
காதலி வரும் வரை காத்திருத்தல் சுகம்...,
உனக்கு காதல்வந்தும், 
நீ காதில் ஓதும்வரை காத்திருப்பேன் ஒரு யுகம்


மறதி முக்கியம் மனிதனுக்கு...
ஆனால் நான், உன்னை 
மறக்க மறந்துவிட்டேன்... 

கண்ணீர் சிந்தாதே..... 
கண்ணை மூடி சிந்தி..... 
வரட்டு பிடிவாதத்தையும், 
வீணான பிரர்த்தனையையும் விட்டு விட்டு.................... 

Tuesday, May 24, 2011

தப்ப விட்ட தருணங்களின் தொகுப்பு.................!




தொட்டுவிடும் தூரத்தில் நிலா
தொடமுடியா உறவில் நான்
உணர்வுகளைக் கட்டுப்படுத்த 
உட்பக்க கன்னம் கடித்தவனாய் 
என்னை நான் அடக்கிக்கொண்டு 
நீண்ட நேரம் போராடுவேன் 
நீ என்னருகில் இருந்த 
கணப்பொழுதில் எல்லாம்.......!
உனக்கு நான் 
காதல் கொண்ட காவலன்.. 
எல்லா பொழுதிலும் நான் 
புனிதம் பேணி தப்பவிட்டேன் தருணத்தை.....!

வெள்ளி மாலை அலுவலகம் 
முடிந்து வீடு வருமுன்னே - அனுமதி 
கேட்பாய் "இன்றிரவு கதைப்போமா?" என்று 
விடிய விடிய கதைத்தோம் 
விடியற்காலை கோழி கூவ 
கோழியினை கடிந்தோம்.. 
கடிந்த மறுகணம் பாங்கு 
சொல்லக் கேட்டோம்
கேட்ட மறுகணம் துண்டித்தோம் 
அழைப்பினை... இதுவரை 
புரியவில்லை எதனை கதைத்தோம்!!!!

உன் ஒரு துளி பார்வைக்காய் 
ஓராயிரம் முறை வருவேன்
உன் நிழல் தெரியும் வீதியெல்லாம்... 
ஒரு முறையேனும் பார்த்திடுவேன் 
உன் ஓவிய முகத்தை
ஓராயிரம் முறைக்கப்புறமேனும்... 

கவிதையும் இலக்கியமும்  
படிக்கும் போதே பிடிக்காது - உனக்கு....
கவிதையே! நீ கதைக்கும்போது -வேறு 
எதுவுமே பிடிக்காது எனக்கு.. 

அழகில் நான் கம்மிதான் 
அறிவிலும் நான் டம்மிதான் 
அளவிலும் நான் சின்னிதான் 
இருந்தும் என்னை காதல் செய்தாய் 
இருப்பதிலே நானே சிறந்தவன் என்றாய்
இருக்கும்போதே எடுத்திருக்கலாம் 
இழந்தபின் மறந்திருக்கலாம் 
தப்பவிட்டேன் தருணத்தை.....!

வில்லுடைக்க தருணம் 
பார்த்திருந்தேன் 
இளவரசியை மணக்க.. 
விசாவுடன் வந்தான்
ராவணன் 
இளவரசியை மணக்க... 
தப்பவிட்டேன் தருணத்தை !........

இயல்பாய் நான் இல்லை 
இயல்பாக நடிக்கிறேன்...
இனியும் என்னால் முடிய வில்லை 
இனிய நினைவோடு துடிக்கிறேன்